இன்று 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 2.45க்கு சுன்னாகம் நகர்ப்பகுதியில் ரவுடிக்கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
சுன்னாகம் நகரப்பகுதி கடை ஒன்றுக்குள் புகந்த ரவுடிக்கும்பல், குறித்த கடையின் கஸியர் பட்டடையில் இருந்தவரிடம் வாள்களைக்காட்டி மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.
அப்பகுதியில் சிவில் உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற போது இருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு குறித்த ரவுடிக்கும்பல் தப்பித்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
காயமடைந்த பொலிஸார் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் நெல்லியடி பகுதி பொலிஸ் புலனாய்வு அதிகாரி நவரட்ண என்றும் அறியக்கிடைக்கின்றது.
சுன்னாகம் பகுதியில் பதட்டச்சூழல் நிலவி வருவதையடுத்து, அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வீதிப்போக்குவரத்து சோதனைகளும் இடம்பெற்று வருகின்றன.