இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை பிரபல திரைப்பட நடிகை கவுதமி இன்று சந்தித்து பேசியுள்ளார்.
ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கவுதமி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிபுணர்வு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசியுள்ளார். அவர் பிரதமருடன் அம்ர்ந்து பேசி கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில் மதிப்புக்குரிய பிரதமரை சந்தித்து திரில் அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது புற்று நோய் அமைப்பு சம்மந்தமாக பிரதமரை கவுதமி சந்தித்திருக்கலாம் என தெரிகிறது.