நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் ரூ.100 கோடிக்கு ஆடம்பர பங்களா வீடு விலைக்கு வாங்கி இருக்கிறார்.
முதல் இடத்தில் இருக்கும் கங்கனா ரணாவத் சம்பளம் ரூ.11 கோடி. பிரியங்கா சோப்ரா ரூ.9 கோடி வாங்குகிறார். இவருக்கு 34 வயது ஆகிறது. இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
சமீபத்தில் எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகைக்கு பங்களா வீடு வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமான கட்டிட நிறுவனத்திடம் இருந்து இந்த பங்களா வீட்டை அவர் வாங்கி இருப்பதாகவும் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பங்களாவை அவர் தனது கனவு இல்லமாக உருவாக்கி வருகிறார். பிரியங்கா சோப்ராவின் ஆலோசனைப்படியே வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள்.
விரைவில் இந்த பங்களாவில் பிரியங்கா சோப்ரா குடியேற இருக்கிறார். ரூ.100 கோடிக்கு வீடு வாங்கிய விவரத்தை சக நடிகர்-நடிகைகளுக்கு தெரிவிக்காமல் அவர் ரகசியமாகவே வைத்து இருந்தார்.