ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, March 25
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்து திருமணம் செய்த பெண் போலீஸ்

    AdminBy AdminOctober 31, 2016No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அரியலூர் அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்து பெண் போலீஸ் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவரது மனைவி லதா. இவர்களுக்கு ரோகிணி, நிலானி என்ற 2 மகள்களும், வாஞ்சிநாதன் என்ற மகனும் உள்ளனர்.

    செல்வகுமார் சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 வருடமாக வேலை பார்த்து வரும் அவர், அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார்.

    மேலும் மாதந்தோறும் தனது மனைவியின் செலவுக்கு பணம் அனுப்பி வந்தார். லதாவும், அவரது குழந்தைகளும் சிங்கப்பூரில் உள்ள செல்வகுமாருடன் போனில் பேசி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வகுமாரும், லதாவும் போனில் பேசும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  மனைவியுடன் பேசுவதை நிறுத்திய  அவர், மாதந்தோறும்   செலவுக்கு பணமும் அனுப்பவில்லை.

    இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமப்பட்ட லதா, தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பேசியும், செல்வகுமார் பணம் அனுப்பவில்லை.

    இதைத்தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு போலீஸ்காரராக பணியாற்றி வரும் ராதிகா (33) என்பவரிடம், தனது கணவர் செலவுக்கு பணம் அனுப்பவில்லை.

    எனவே அவரிடம் நீங்கள் பேசி பணம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி, செல்வகுமாரின் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.

    அதனை வாங்கிய ராதிகா, செல்வகுமாரை தொடர்பு கொண்டு பேசி, பணம் அனுப்ப கூறுகிறேன். நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறவே, அதனை நம்பி லதா அங்கிருந்து சென்றார். ஆனால் புகார் செய்து 4 மாதங்கள் ஆகியும் ராதிகா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனிடையே செல்வகுமாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ராதிகா, லதாவுக்கு பணம் அனுப்புமாறு கூறியதோடு, செல்வகுமாரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் தங்களது புகைப்படங்களை ‘வாட்ஸ்அப்’ மூலம் பகிர்ந்து கொண்டனர். மேலும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.

    இது தொடர்பான தகவலை செல்வகுமார்  வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு தெரிவித்தார்.

    இதையறிந்த அவரது நண்பர் ஒருவர், இதுபற்றி லதாவிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த லதா, பெண் போலீஸ் ராதிகாவை சந்தித்து தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் அவர், எங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த செல்வகுமார், மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக பேசவில்லை.

    மேலும் காலையில் வீட்டில் இருந்து சென்றவர் இரவு தான் வீடு திரும்பியுள்ளார்.

    இதனிடையே லதாவுக்கு தெரியாமல் கடந்த 28-ந் தேதி செல்வகுமாரும், ராதிகாவும் சுவாமிமலை கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதனை அறிந்த லதா, இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண் போலீஸ் ராதிகாவை தேடி வருகின்றனர்.

    ராதிகாவுக்கு ஏற்கனவே ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தை சேர்ந்த மணிமுருகன் என்பவருடன் திருமணமாகியுள்ளது.

    அவர்களுக்கு ஹரிகரன் (5) என்ற மகன் உள்ளான். மணிமுருகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ராதிகா, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Post Views: 3

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    சுயநினைவை இழந்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

    March 25, 2023

    பெண் கொலை வழக்கில் கிளி சாட்சியத்தால் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

    March 25, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2016
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ

    March 25, 2023

    “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்

    March 25, 2023

    இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது

    March 25, 2023

    14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை; இளைஞன் தலைமறைவு

    March 25, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!
    • ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ
    • “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்
    • இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version