பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதரந்திர கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகிறது. எனினும் கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இடையில் முரண்பாடான கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களிடம் அனுப்பி வைத்துள்ள கட்சியை மீண்டும் இணைப்பதற்கான யோசனை தொடர்பில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கம் ஒன்றிக்காக பேசுவதும், ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் இணக்கப்பாடு குறித்து பேசும் நல்ல நிலைமை என்பதனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்கு சென்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் வலுவடைய செய்ய வேண்டும் என்பது கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம உட்பட குழுவினரின் கருத்தாக உள்ளது.
எனினும் ஜனாதிபதியை நம்ப முடியாதென பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் எந்த நிலையிலும் புதிய கட்சி கட்டியெழுப்பப்படுவதனை கைவிடப்போவதில்லை எனவும், ஏதாவது ஒரு முறையை பயன்படுத்தி கூட்டு எதிர்க்கட்சியை பிளவு படுத்துவதும் ராஜபக்ச குடும்பத்திற்குள் பிரிவினை ஏற்படுத்துவதற்குமே ஜனாதிபதி செயற்படுத்துவதாக பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்சவுடன் இரகசிய கலந்துரையாடல் நடத்துகின்றமை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் உயர் பதிவிக்காக சமல் ராஜபக்சவை தீர்மானித்தல் ஆகியவை ராஜபக்ச குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தும் செயற்பாடுகள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எப்படியிருப்பினும் சமல் ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பதவி வழங்க தீர்மானித்திருப்பதற்கு மஹிந்த ராஜபக்சவின் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் முன் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளுக்கு எதிராகியுள்ள நிலையில் நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை உறுதிபடுத்தும் யோசனையே அவசியம் என்பது மஹிந்தவின் தீர்மானமாக காணப்படுகின்றது.
அத்துடன் அதற்கு அவசியமான நடவடிக்கை ஏற்படுத்தியதன் பின்னர் அவர் அரசியலில் இருந்து விலகி இருப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார். அதற்காக ஏதாவது ஒரு பதவியை வழங்குவதற்கு மைத்திரி தரப்பு விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நாமல் ராஜபக்சவுக்கு கட்சியினுள் உயர் பதவி வழங்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை முறி மோசடி தொடர்பிலான மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு குறித்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான வருத்தத்தில் உள்ளதாக கடந்த நாட்களில் தகவல் வெளியாகியிருந்தன.
ராஜபக்சவின் இந்த நிலைப்பாடு காரணமாக அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு பகுதியினர் அவரை விட்டு விலகுவதற்கு தயாராகவுள்ளதாக கடந்த வியாழக்கிழமை காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் முறி மோசடி தொடர்பில் மஹிந்த முதல் முறையாக கருத்து வெளியிட்டிருந்தார். அங்கு முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அவரது மருமகனுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் நாமல் ராஜபக்ச மற்றும் அர்ஜுன் எலோசியஸ் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். அவ்வாறான பாரிய கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் ராஜபக்ச குடும்பத்தின் சிலருக்கு ஆலோசனை வழங்கியதும் அவர் என அப்போதைய காலப்பகுதியில் ஒரு கதை பேச்சப்பட்டு வந்தன. இந்த நட்பின் காரணமாக ராஜபக்சர்கள் முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்து வெளியிடுவதனை அவர்கள் புறக்கணித்து வந்துள்ளார்கள் என்பது சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பின் குற்றச்சாட்டாகும்.
இதேவேளை, பசில் ராஜபக்ச மைத்திரி தரப்பினருடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி கொள்வதற்கு எதிர்ப்பு வெளியிடுவதற்கான பிரதான காரணம், ராஜபக்ச குடும்பத்தினுள் அரசியல் ரீதியில் முன்வருதற்கான சந்தர்ப்பம் இழக்கப்படும் என்பதாகும் என கூட்டு எதிர்க்கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த அரசாங்கத்தின் போது பசில் ராஜபக்ச தனக்கு பெலிஅத்த பகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியை மஹிந்த ராஜபக்சவிடம் கோரியிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு வழங்காமல் நிருபமா ராஜபக்சவுக்கு வழங்கியிருந்தார்.
பின்னர் கம்பஹா மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்துவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும், அப்போதைய காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, கரு ஜயசூரிய, அத்துரலிய ரத்தின தேரர் அவருக்கு அரசியல் ரீதியான சவால் என கருதி ஆரம்பத்தில் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த பசில் பின்னர் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக தனியாக கட்சி ஒன்றை கட்டியெழுப்புவதன் ஊடாக ராஜபக்ச குடுபத்தில் இருந்து வரும் எதிர்ப்புகளை வெற்றிக்கொள்ள முடியும் என பசில் ராஜபக்ஷவின் எண்ணவாகும். இதனை சாதகமாக்கும் வகையில் புதிய கட்சியை கட்டியெழுப்புவதற்கு பாரிய ஆர்வம் காட்டுகின்ற போதிலும் அதற்கு மஹிந்த ராஜபக்ச விரும்பவில்லை என அந்த தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாமல் ராஜபக்ச தனது இளைஞர் அமைப்பாக நடத்தி சென்ற நீலப்படை அணியை வேறு பெயரில் கட்டியெழுப்புதவற்காக அண்மையில் தலவத்துகொடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடலை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.