முதல்வர் ஜெயலலிதா மிக விரைவில் வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டனை சேர்ந்த டாக்டர் ரிச்சர் பியல், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு பிசியோ பயிற்சி அளிக்க பிசியோதெரபி நிபுணர் நேற்று சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா பற்றி அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதல்வர் நலமாக உள்ளார். தீபாவளிக்கு மறுநாள் நிறைந்த அமாவாசை என்பதால் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பூசணிக்காய் வைத்து பூஜை செய்தோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் அவர் குணமடைய பிரார்த்தனை செய்கிறார்கள்.
முதல்வர் மிக விரைவில் வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.