எகிப்து நாட்டில் வாழ்ந்த பிரபலமானவர்கள் உட்பட பலரை மம்மிக்கள் எனப்படும் விசேட கல்லறையினுள்ளேயே பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள்.
இந்த மம்மிக்கள் உல மக்களுக்கு மட்டுமன்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் சிம்ம சொற்பனமாகவே இதுவரை விளங்கி வருகின்றது.
எனினும் அவ்வப்போது மம்மிகள் தொடர்பிலான சில ரகசியங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
இப்படியிருக்கையில் மம்மிக்களின் சவப்பெட்டிகளை உடைக்காது அவற்றிலிருக்கும் மர்மங்களை வெளிக்கொணர்வதற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளனர்.
இதன்படி X – கதிர்களை சவப்பெட்டிகளினுள் அனுப்பி உள்ளே செதுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் தொடர்பிலான தகவல்களை பெறுவதற்கு முயன்றுவருகின்றனர்.
இம் முயற்சியில் Berkeley பல்கலைக்கழகம் , Duke பல்கலைக்கழகம், University College London, Stanford பல்கலைக்கழகம் என்பவற்றினைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக களமிறங்கியுள்ளனர்.
மேலும் இந்த X – கதிர் தொழில்நுட்பத்தில் ஒளியின் வேகத்திற்கு இணையான வேகத்தில் இலத்திரன்கள் பயணிக்கச் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.