அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் இன்று பி.ப.2.30 மணிக்கு அம்பாறை மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதையடுத்து பொலிஸார் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் வரிப்பொத்தான்சேனை, இறக்காமம் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர், மாணிக்கமடு கோவில் நிர்வாகத்தினர், அம்பாறை விகாராதிபதி, இறக்காமம் பிரதேச செயலாளர், இறக்காமம் 07 கிராம சேவகர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று நடைபெறவுள்ள கூட்டம் தொடர்பில் அம்பாறை விகாராதிபதியிடம் வினவியபோது, மாயக்கல்லி மலை உச்சியில் நாம் தற்போது புத்தர் சிலையை வைத்துள்ளோம்.
எனினும் அந்நடவடிக்கைக்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அத்துடன் அப்பிரதேசத்திலுள்ள தமிழ் மக்கள் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். இதேவேளை பிரதேச முஸ்லிம்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
உரிய அனுமதி பெற்ற பின்னரே அப்பிரதேசத்தில் புத்தர் சிலையை வைத்துள்ளோம்.
அத்துடன் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின்போது நாம் எமது நியாயங்களை முன்வைத்து இணக்கப்பாடு காணவுள்ளோம். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் தியான மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
அம்பாரை மாவட்ட புத்தர் சிலை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி
இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமொன்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்கு இன்று அரசாங்க அதிபரால் கூட்டப்பட்ட கூட்டத்திலும் தீர்வு காணப்படவில்லை.
அம்பாரை மாவட்ட புத்தர் சிலை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி
இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை
இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமொன்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்கு இன்று அரசாங்க அதிபரால் கூட்டப்பட்ட கூட்டத்திலும் தீர்வு காணப்படவில்லை.
பௌத்த குடியிருப்புகளே இல்லாத இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது கடந்த சனிக்கிழமை அம்பாரை நகரிலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளினால் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அந்த பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களினாலும் தமிழ் , முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபரால் மாவட்ட செயலகத்தில் இந்த சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் , இந்து ஆலய நிர்வாகிகளுடன் புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் , முஸ்லிம் தரப்புகள் பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொருத்தமற்றது.
இதனால் எதிர்காலத்தில் பின் விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்காமம் பிரதேசத்தில் அகழ்வராய்ச்சிக்குரிய 19 இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாக பௌத்த பிக்குகளினால் இதற்கு பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது
இரு தரப்பும் தங்கள் கருத்துக்களை முன் வைத்த நிலையில் இந்த விவகாரத்தை ஆராய்ந்து சுமூகமான தீர்வொன்றை காண்பதற்கு தமிழ் , முஸ்லிம் , பௌத்த துறவிகள் மற்றும் சிவில் அதிகாரிகள் என 15 பேர் கொண்ட குழு வொன்று இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.
இக் குழு வியாழக்கிழமை கூடவிருக்கின்றது
அம்பாரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.எம் மன்சூர் , கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.ஐ. உதுமான்லெப்பை ஆகியோரும் கலந்து கொண்டனர்
அம்பாரை மாவட்டத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள இறக்காமம் பிரதேசத்தில் மாணிக்கமடு கிராமம் மட்டும் தான் தமிழ் கிராமம் ஆகும்.
அந்த கிராமத்தை அண்டியதாக மாயக்கல்லி மலை அமைந்துள்ளது
மாயக்கல்லி மலை மீது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை
பௌத்த குடியிருப்புகளே இல்லாத இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது கடந்த சனிக்கிழமை அம்பாரை நகரிலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளினால் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அந்த பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களினாலும் தமிழ் , முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபரால் மாவட்ட செயலகத்தில் இந்த சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் , இந்து ஆலய நிர்வாகிகளுடன் புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் , முஸ்லிம் தரப்புகள் பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொருத்தமற்றது.
இதனால் எதிர்காலத்தில் பின் விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்காமம் பிரதேசத்தில் அகழ்வராய்ச்சிக்குரிய 19 இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாக பௌத்த பிக்குகளினால் இதற்கு பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது
இரு தரப்பும் தங்கள் கருத்துக்களை முன் வைத்த நிலையில் இந்த விவகாரத்தை ஆராய்ந்து சுமூகமான தீர்வொன்றை காண்பதற்கு தமிழ் , முஸ்லிம் , பௌத்த துறவிகள் மற்றும் சிவில் அதிகாரிகள் என 15 பேர் கொண்ட குழு வொன்று இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.
இக் குழு வியாழக்கிழமை கூடவிருக்கின்றது
அம்பாரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.எம் மன்சூர் , கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.ஐ. உதுமான்லெப்பை ஆகியோரும் கலந்து கொண்டனர்
அம்பாரை மாவட்டத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள இறக்காமம் பிரதேசத்தில் மாணிக்கமடு கிராமம் மட்டும் தான் தமிழ் கிராமம் ஆகும்.
அந்த கிராமத்தை அண்டியதாக மாயக்கல்லி மலை அமைந்துள்ளது