பூனையின் தோலை உரித்து வேக வைத்து அதை ஆட்டுகறி என ஏமாற்றி பொதுமக்களுக்கு கடைகளில் விற்பனை செய்யும் கும்பலை பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள பிரபல பகுதியான பல்லாவரத்தில் பூனைகளை அதிக அளவில் பிடித்து அதன் தோலை உரித்து அதை கடையில் கொடுத்து ஆட்டு கறி பிரியாணியாக மக்களுக்கு தருகிறார்கள் என்பதை People for Animals (PFA) என்னும் விலங்கு பாதுகாப்பு அமைப்பினர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
இது பற்றி அந்த அமைப்பின் துணை தலைவர் Dr Shiranee Pereira கூறுகையில், எங்களுக்கு பூனையை வைத்து இப்படி செய்கிறார்கள் என்ற சந்தேகம் பல நாட்களாகவே இருந்தது.
அதை ஆதாரத்துடன் வெளியில் கொண்டு வர தான் காத்திருந்தோம். அதன் படி எங்கள் அமைப்பை சேர்ந்த ஆட்கள் இந்த செயலில் ஈடுபடுவோரை கண்காணித்து, அந்தகும்பல் பூனைகளை கடத்தி வந்து கொல்வதை புகைப்படமாக மற்றும் வீடியோவாக எடுத்துள்ளனர். அதை பொலீசாரிடம் கொடுத்துள்ளோம் என அவர் கூறினார்.
இது பற்றி விசாரித்து வரும் ஒரு உயர் பொலிஸ் அதிகாரி கூறுகையில், எங்களுக்கு ஆதாரத்துடன் புகார் வந்ததால் பல்லாவரத்தில் உள்ள அந்த இடத்துக்கு சென்று 16 பூனைகளை மீட்டுள்ளோம்.
இதை செய்பவர்கள் பல்லாவரத்தில் உள்ள உணவகங்களில் அந்த பூனைகளை விற்றுள்ளனர். அது எந்தெந்த உணவகங்கள் என சோதனை செய்து வருகிறோம். மேலும் இதற்கு பின்னால் பெரிய நெட்வொர்க் செயல்படுவதாக நினைக்கிறோம்.
சீக்கிரம் இதில் சம்மந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.