கொழும்பு இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு அருகில் நடத்தி செல்லப்படும் எக்ஸ்டசி போதைப்பொருள் வர்த்தகத்தை சுற்றிவளைப்பதற்காக பொலிஸாரினால் திட்டமிட்டிருந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு அதிகமாக உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்மார்களே அதிகமாக செல்கின்றனர்.
சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்படுவதோடு, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் கைது செய்யப்பட்டால் அவர்கள் சிரமத்திற்குள்ளாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் சுற்றிவளைப்புகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலை 6.30 மணியளவில் திறக்கப்படும் இந்த இரவுநேர கேளிக்கைவிடுதி காலை 7.00 மணிவரை திறந்திருக்கும். எக்ஸ்டசி போதைப்பொருளுக்கு மேலதிகமாக கேரள கஞ்சா, கொகேன் மற்றும் டெபா என்ற போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரவுநேர கேளிக்கை விடுதியின் முன்னால் உள்ளவர்கள் மற்றும் உள்ளே சேவையில் ஈடுபடும் பணிப்பெண்களின் உதவியுடன் போதைப்பொருள் வழங்கும் நபர்கள் யார் என்பதனை தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசியல் அழுத்தங்களின் காரணமாக சுற்றிவளைப்பு நிறுத்தப்பட்டால் இந்த வர்த்தகம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
எக்ஸ்டசி வில்லை ஒன்று கிட்டத்தட்ட 14 ஆயிரம் ரூபாயாகும். ஒரு இரவில் மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் மகன்மார்கள் இரவுநேர கேளிக்கை விடுதிகளில் மோதல்களுக்கு தலையிட்ட பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட அரசியல் அழுத்தங்கள் காரணமாக பொலிஸாரினால் விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.