இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் முழு இளைஞராக மாற்றப்பட்டுள்ளார்.
குரோமசோம்களின் குளறுபடியால் ஆண்கள் தங்களை பெண்களாகவும், பெண்கள் தங்களை ஆண்களாகவும் கருதிக் கொள்வதுண்டு.
இதனால் இத்தகைய பாலினத்தவர் தாங்கள் விரும்பும் வகையில் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதை விரும்புவர்.
இதனை உலகின் பல நாடுகள் அங்கீகரித்து இருந்தாலும், இத்தகைய அறுவை சிகிச்சைகள் மிகவும் ஆபத்து நிறைந்த ஒன்றாகவே உள்ளது.
இந்தியாவில் இதைப் போன்ற சிகிச்சை முறைக்கான வசதிகளும் பரவலாக இல்லை. இருப்பினும் பெங்களூரைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஒருவர் இந்த ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு ஆணாக மாறியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்ட சிகிச்சையாக கடந்த ஜனவரி மாதம் அந்த பெண்ணின் மார்பகங்கள், கருப்பாதை, கருப்பை நீக்கப்பட்டன.
அடுத்தகட்டமாக அவரது உடலில் ’டெஸ்ட்டஸ்ட்ரோன்’ எனப்படும் ஆண்மை சுரப்பிக்கான ஹார்மோன்களை ஊக்குவிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவருக்கு சமீபத்தில் தான் ஆணுறுப்பை அமைப்பதற்கான ஆபத்தான, அதிநவீன அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
அடுத்தகட்டமாக, அவரது முழங்கையின் ஒருபகுதியில் இருந்து தசை வெட்டி எடுக்கப்பட்டு, ஆணுறுப்புடன் சிறுநீர் பாதையும் வடிவமைக்கப்பட்டு, அடிவயிற்றில் பொருத்தப்பட்டது.
இதன்மூலம் இந்த பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முழுஅளவில் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பராக் டெலாங் கூறுகையில், இன்னும் 2-3 மாதங்களில் ஆணுறுப்பின் எழுச்சிக்கு தேவையான செயற்கை பம்ப் ஒன்று அவரது உடலில் பொருத்தப்படவுள்ளது.
இதன்பின்னர், இந்த வாலிபர் தனது புதிய உடல் மற்றும் புது பாலின அடையாளத்தை கண்டு மகிழ்ச்சியடைவார் என்று தெரிவித்துள்ளார்.