இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் இப்படி தான் இருக்கும் என்று மாதிரி புகைப்படங்கள் பரவி வருகிறது.
இந்த நோட்டுகள் மைசூரு ஆர்.பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இருக்கும் ரூபாய் நோட்டுகளை விட முற்றிலும் வேறுவிதமாக இருக்கும் இந்த நோட்டுகளில் காந்தியின் படமும் இல்லை.
இதுகுறித்த எந்த அறிவிப்பையும் ஆர்.பி.ஐ. இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.