அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், ஆட்சியை பிடிக்கப்போவது டொனால்ட் டிரம்ப் தான் என சாணக்யாக மீன் கணித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்க்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள Indian Community Welfare என்ற அமைப்பு, அமெரிக்காவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பதனை கண்டறிவதற்காக, சாணக்யா மீன் அடைத்துவைக்கப்பட்டுள்ள தொட்டியில், ஹிலாரி மற்றும் டொனால்ட் டிரம்பின் புகைப்படங்களை போட்டுள்ளது.
இதில், இந்த சாணக்யா மீன் யாருடைய புகைப்படத்தை தெரிவு செய்கிறதோ, அவர்தான் ஆட்சியை பிடிப்பார் என்பதாகும். அதன்படியே சாணக்யா மீன், டிரம்பின் புகைப்படத்தை வாயில் கவ்வியுள்ளது. இதனால் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆவார் என சாணக்யா மீன் சொல்கிறார்.