கங்கை நதியில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் மிதந்ததாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ அருகே மிர்சாபூர் பகுதியில்கங்கை நதியில் பழைய 500,1000 நோட்டுகள் மிதந்தபடி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை அங்குள்ள மக்களிடம் விசாரித்தனர். இதில் எவ்வளவு மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மிதந்தன என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து அம்மாநில காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.