வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி நீக்கம் செய்து, வேறு நபருக்கு அப்பதவியை வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பதவி நீக்கம் குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில்,
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏனெனில், யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களுக்கு வடமாகாண சபையில் எதிர்க்கட்சிக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்றும் அந்த கடிதத்தில் கே.என்.டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இருந்த போதிலும், எதிர்க்கட்சி தலைவரை பதவி நீக்கம் செய்யும் உரிமை வடமாகாண ஆளுநருக்கு இல்லை எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரே எதிர்க்கட்சி தலைவரை பதவி நீக்கம் செய்து மற்றொருவருக்கு சந்தர்ப்பத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதும் சட்ட பூர்வமானதாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.