கைவிட்டு போன ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீவிரமான செயற்பட்டு வருகிறார்.
இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் சூழ்ச்சி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும் அவ்வாறான எந்தவொரு கட்சி அல்லது முன்னணி உருவாக்கப்பட்டாலும் அதில் நாமலை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வீழ்ச்சியடைவதற்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் சுதந்திர கட்சியின் பிரபல தலைவர்களை தவறான வழியில் அனுப்பும் நடவடிக்கைகள் மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் தனது பெயரை செல்லும் சொத்தான நாமல் ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உரிமையாளராக பெயரிடுவதற்காக அவரை தொடர்ந்து கட்சியில் வைத்துக் கொள்வதற்கு மஹிந்த திட்டமிட்டுள்ளார்.
கீழ் மட்டத்தின் தலைவர்களை தவறான வழியில் வழி நடத்தி, நாமல் ராஜபக்சவின் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.