முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து திரும்பியதும் அவரை வீட்டில் நேரில் சந்திப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில் தேமுதிக சார்பில் அரவை எம். முத்து போட்டியிடுகிறது. அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அரவக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த் பேசியதாவது,
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து திரும்பியதும் அவரை வீட்டில் நேரில் சென்று சந்திப்பேன் என்று தெரிவித்தார்.
மேலும் எல்லோரையும் போல் முதல்வரை மருத்துவமனைக்கு சென்று சந்திக்க மாட்டேன்.
என்னை நேரில் சந்திக்க அனுமதிக்கட்டும் நான் சென்று பார்க்க தயார். மற்றவர்கள் போல் நடிக்க மாட்டேன். என்னை பொறுத்தவரை இறைவன் அருளாள் ஜெயலலிதா பூரண குணமடைந்து மீண்டும் நல் ஆட்சி புரிய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.