கொழும்பில் கடந்த 3ஆம் திகதியன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும், தீ வைத்து எரித்தும் கொலை செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்திருந்த டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத்தை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்தமைக்காக சுரேஷ் பிரியசாத் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களை அச்சுறுத்திய ரௌடி பிக்கு கைதுசெய்யப்படுவாரா??