யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கேரளா கஞ்சாவை தாம் கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஏ9 வீதி, நொச்சிமோட்டைப் பாலத்திற்கு அருகில் வைத்து செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் இக் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இருந்து கொழும்பு கொச்சிக்கடை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான குறித்த ஹயஸ் வாகனத்தை நொச்சி மோட்டைப் பகுதியில் மறித்து சோதனை செய்த போது அதன் இருக்கைகளில் மஜிகவும் சூட்சுமமான முறையில் 70 கிலோ கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தையும் அதில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 இளைஞர்களையும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.