கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு அளிக்கப்பட்டது.
கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச் நீதிமன்றம், காட்சிப்படுத்தக்கூடிய விலங்காக காளை உள்ளது.
அதை எப்படி விளையாட்டில் அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். அதோடு வழக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட சீராய்வு மனு எந்த வகையிலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் வகையில் இல்லை என்று கூறி மனு தள்ளுபடி செய்துள்ளனர்.