புலம்பெயர் தேசத்திலிருந்து… “ஒழுங்காக பள்ளிக்கூடம் போய், ஆங்கிலம் மற்றும் சிங்கள, தமிழ் மொழியை சரளமாக கற்றறிந்த, வீரத்தமிழன் ஒருவன் பேசிய பேச்சால் கதிகலங்கிபோன ரௌடி சுமணரத்ன தேரர் பயத்தில் நடுநடுங்கிக்கொண்டு விகாரையில் ஒழிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
(இவர்தான் அந்த ரௌடி சுமணரத்ன தேரர்)
அப்படி என்னதான் பேசினான் அந்த படித்த, வீரத்தமிழன்?? இவன் பேசும் ஆங்கில மொழியின் உரைநடையை கேட்டால் ஆங்கிலேயர்களே கதிகலங்கி போய்விடுவார்கள்.
நீங்களே கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்..
தலைவர் சர்வதேசத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அன்ரன் பாலசிங்கத்தை நியமித்ததற்கு பதிலாக இப்படிப்பட்ட படித்த ஒரு தமிழனை தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தால் சிலவேளை வெகு இலகுவாக தமிழீழத்தை அடைந்திருக்கலாம் போல தோன்றுகின்றது..
ஆனால்.., 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இவன் எங்கு இருந்தான் எனபது தெரியாமல் போய்விட்டதே.. ‘வடை போச்சே’
“பிரபாகரன் வருவார்!! சுமணரத்ன தேரரிற்கு வந்த திகில் எச்சரிக்கை…” என்ற தலையங்கத்தின் கீழ் இச்செய்தியானது சில இணையதளங்களில் (www.jvpnews.com, http://kathiravan.com ) .. பிரசுரிக்கப்பட்டு உலாவி வருவதை நீங்கள் பார்த்திருப்பீா்கள்.
“தலைவர் இருக்கிறார்.. வருவார்.. வந்துகொண்டிருக்கிறார்..’ என சில இணையத்தளங்கள் தொடர்ச்சியாக இப்படிப்பட்ட செய்திகளை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் நினைத்துக்கொண்டு இப்படிப்பட்ட செய்திகளை போடுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை?? தமிழர்கள் எல்லோரும் “அறிவிலிகள்” என நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ??
இது வேறொன்றுமில்லை..விஷயம் இதுதான்.
வடிவேலுவை வைத்து காமடி பண்ணுவதுபோல, பிரபாகரனை வைத்து காமடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். என்பதுதான் உண்மை.
இப்படிப்பட்ட வீடியோக்களை (பிரபாகரனுடன் சம்பந்தப்படுத்தி) உருவாக்கி சில இணையத்தளங்கள் (லங்காசிறி குழுமம்) மூலம் பணம்கொடுத்து பிரசுரிப்பதன் மூலம் தனிநபர்கள் கூட தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள முனைகிறார்கள் என்பதுதான் இப்படிப்பட்ட செய்திகளின் முக்கிய நோக்கமாகும்.
புலம்பெயர் தமிழர்கள் இதை புரிந்துகொள்வார்களா??