மருத்துவமனையில் தள்ளுவண்டி தராததால் தனது கணவரை மருத்துவமனையின் முதல் தளத்திற்கு கையால் இழுத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்த மனைவி தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்தியா, ஆந்திர பிரதேச மாநிலம் குண்டகள் என்ற பகுதியை சேர்ந்த ஸ்ரீவாணி என்ற பெண் அவரது கணவர் உடல்நலம் பாதிக்கபப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு சென்ற அவர் கணவருக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார்.
அவர் நடக்க முடியாது என்பதால் தள்ளுவண்டி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்துள்ளது.
இதனால் மனமுடைந்த ஸ்ரீவாணி தனது கணவரை மருத்துவமனையின் முதல் தளத்துக்கு சரிவுப்பாதையில் கையால் இழுத்து சென்றார்.
இதனை அங்குள்ள மக்கள் வேடிக்கை மட்டும் பார்த்தபடி இருந்தனர்.
ஆனால் ஸ்ரீவாணி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கணவரை முதல் தளத்துக்கு இழுத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தார்.
நோயாளி ஒருவருக்கு தள்ளுவண்டி தராமல் மனைவியே அவரை இழுத்து சென்று மருத்துமனையில் சேர்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.