பண்டாரகம – மெதகம பிரதேசத்தில் கடையொன்றுக்குள் புகுந்து கொள்ளையடித்த நபர்களில் ஒருவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பொலிஸார் தேடிச் சென்ற வேளையில் அவர் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மெதகமவில் உள்ள கடையொன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த இருவர் அங்கிருந்து சுமார் 30 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.
இதன் போது கடையில் இருந்த பெண்ணொருவருடனும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பெண்ணின் மாலையை குறித்த நபர்களில் ஒருவர் கொள்ளையிட முயன்ற போது அப்பெண்ணுடன் மோதல் ஏற்பட்ட து.
அப்பெண் அந்நபரை தாக்கியுள்ளார். இக்காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.