2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்றத்தில் விமல் வீரவன்சவின் பெயரை குறிப்பிடவுடன் “வயக்கரா.. வயக்கரா..” என நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கூச்சலிடப்பட்டுள்ளது.
இதனால் பெரும் சங்கடத்திற்கு முகம்கொடுத்த வீரவன்ச, வாக்கெடுப்பின் போது கடும் சிரமத்திற்கு மத்தியில் விமல் வீரவன்ச அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமல் வீரவன்சவின் ஹோகந்தர வீட்டில் அண்மையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது குறித்த இளைஞன் அதிகளவான வயக்கரா மாத்திரைகளை உட்கொண்டதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இளைஞனின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்களால் வீரவன்ச மனரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.