வயோதிபப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இளம் குடும்பஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு தோட்டம் ஒன்றின் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த 54 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரை பலவந்மாக காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு குறித் நபர் தப்பிச் சென்றுள்ளார்.
வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கலபுர எனும் பிரதேசத்திலேயே நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிபப் பெண் தனது கணவருடன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர் இருவரும் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், தான் வீட்டிற்குச் சென்று சமையல் வேலைகளைச் செய்வதாகக் கூறி, அவரது கணவர், அவ்வீதியால் வந்துள்ள மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இப்பெண் தனிமையிலேயே வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அவ்வீதிக்கு அருகிலிருந்து காட்டுப் பகுதியில் மறைந்திருந்த சந்தேகநபர் திடீரென இப்பெண்ணிக் முன்னால் பாய்ந்து அப்பெண்ணை அச்சுறுத்தி பலவந்தமாக அருகில் அமைந்துள்ள பாழடைந்த காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை வண்ணாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.