அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் டிரம்பை யாரும் மோசமானவர் என்று கருத வேண்டாம் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜானதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிளாரி கிளிண்டன் தான் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி என அமெரிக்க மக்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், டிரம்ப் தெரிவு செய்யப்பட்டது, பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு காரணம் அவர் மீது இருந்த பல்வேறு வழக்குகள். இதனால் பலரும் டிரம்பை மிகவும் மோசமானவர் என்றும் இவர் எப்படி தெரிவு செய்யப்பட்டார் என புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் நடைபெற்று வருகின்றது. இதில் தற்போதைய அமெரிக்காவின் ஜானாதிபதியாக உள்ள ஒபாமா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் இளைஞர்கள் பல கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பதில அளித்த அவர் கூறியதாவது, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக உள்ள டிரம்ப்பை யாரும் மிகவும் மோசமானவர் என கருத வேண்டாம்.
அவரை வெள்ளை மாளிகையில் பணியாற்ற விடுங்கள், அதன் பின் அவர் நிர்வாகம் எப்படி நடத்துகிறார் என்பதை பாருங்கள் என கூறியுள்ளார்.
மேலும், உலக நாடுகள் அமைதியாக, செழிப்புடன் ஒற்றுமையாக வாழும் பொருட்டு அவருக்கு உண்டு, அந்த அளவிற்கு அவரிடம் நிர்வாகம் இருக்கிறதா, இல்லையா என்று பார்த்து பின்னர் தீர்மானித்து கொள்ளுங்கள்.
இதனால் டிரம்ப் குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த ஒரு முடிவுக்கு வரவேண்டாம் என்றும் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இது முக்கியமானதாகும் எனவும் கூறியுள்ளார்.