இந்த வருடம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய செய்திகளில் ஒரு இயக்குனர் விஜய்-அமலாபால் விவாகரத்து விஷயம்.
‘தெய்வத்திருமகள்’ படத்தின்போது தோன்றிய காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை ஒரு வருடத்திலேயே இவர்களுடைய காதல் திருமணம் முடிவிற்கு வந்துவிட்டது.
இவர்கள் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் தங்களுடைய பிரிவு குறித்து அமலாபால் முதல்முறையாக மனம் திறந்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
18 வயதில் ‘மைனா’ படத்தில் நடித்து 23 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும், உண்மையில் இந்த வயது திருமணத்திற்கு ஏற்ற வயதில்லை என்றும் அந்த சமயத்தில் தனக்கு இதுகுறித்து அறிவுரை யாரும் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.
யாரும் பிரிவதற்காக காதலிப்பதில்லை. ஆனால் நாங்கள் பிரிய எடுத்த முடிவு கடினமானது. இருப்பினும் விஜய்யை நான் இன்னும் காதலிக்கின்றேன்.
காதலித்துக்கொண்டே இருப்பேன். விட்டுவிடுவதும் காதல்தான். நான் 23 வயதில் திருமணம் செய்துகொண்டேன். அதுதான் நான் செய்த தவறு” என கூறியுள்ளார்.
விவாகரத்து முடிவு எடுத்த பின்னர் தற்போது தனுஷுடன் வடசென்னை’, ‘விஐபி 2’ மற்றும் ‘திருட்டுப்பயலே 2’ ஆகிய படங்களில் அமலாபால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.