வவுனியாவில் முன்னால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் அவருடைய வீட்டின் முன்னால் அவர் சடலமாகக் கிடந்ததை, அவருடைய வீட்டிற்கு மணல் ஏற்றிச் சென்ற வாகன சாரதியொருவர் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் பணியாற்றியிருந்து இப்போது ஜெர்மனியில் குடியுரிமை பெற்றுள்ள 59 வயதுடைய விக்கிரமரட்ன குணசிறி என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையாரே உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு அவருடைய வீட்டில் விருந்துபசாரம் ஒன்று நடைபெற்றபோது, இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா காவல் துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய 59 வயதுடைய விக்ரமரட்ன குணசிறி என்ற நபரின் மரணம் தொடர்பில், இதுவரை ஐந்து பேர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த திரும்பிய 59 வயதுடைய விக்ரமரட்ன குணசிறி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மீண்டும் ஜேர்மனுக்கு சென்றிருந்தார்.
எனினும் ஜேர்மனியில் காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை என தெரிவித்து வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்து வீட்டை திருத்தம் செய்துவந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றும் வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்த அயலவர்கள், இன்று காலை மணல் இறக்குவதற்காக சென்ற டிப்பர் சாரதியே குறித்த வீட்டின் உரிமையாளர், வீட்டு வாசலில் சடலமாக காணப்பட்டதைத் கண்டு, வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர் அண்மையில் வவுனியாவிற்கு சென்று இவரை பார்வையிட்டு சென்றதாகவும் தெரிவித்த உறவினர்கள், 1985 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இவர் ஸ்ரீலங்கா பொலிஸில் பணியாற்றியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.