தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், வட மாகாணத்தில் அண்மைய காலமாக சமூகவிரோ செயற்பாடுகள் தலை தூக்கியுள்ளன. மேலும், அண்மையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாகி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன…?
சம்பந்தன் அவர்களின் காலத்துக்குப் பின்னர் கூட்டமைப்பு உடையுமா..? கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்…? வட மாகாணத்தில் தண்ணீர்ப் பிரச்சனைக்குத் தீர்வாக இரணைமடு குளத்துநீரை அங்கு செல்வதிலுள்ள தடைகள் என்ன..? இது போன்ற கேள்விகளுக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் பா.கஜதீபன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சிநெறியில் கலந்துகொள்ளும் நோக்கில் அவுஸ்திரேலியா சென்றுள்ள வட மாகாண சபையின் உறுப்பினர் பா.கஜதீபன் அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்று வட மாகாணத்தில் குடி நீரை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அந்தளவுக்கு நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மாகாண சபை தனக்குரிய அதிகாரங்களை கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும், இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி நீர் தொடர்பான சகல விடயங்களுமே மத்திய அரசின் கையிலேயே தங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசுடன் பேசியிருக்கின்றோம்
இரணைமடு குளத்துநீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு குறித்து தொடர்ச்சியா ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வரும்.
மேலும், இது உணர்வு பூர்வமான விடயமாக இருக்கின்றமையினால் மிகவும் இதனை கையாள வேண்டியுள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் பொலிஸாரின் துப்பாகி சூட்டுக்கு இலக்காகி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறும் கருத்தானது வேடிக்கையான ஒன்றாக இருக்கின்றது. இந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை வடக்கில் தற்போது கலாச்சார சீரழிவு தலைதூக்கியுள்ளது. எனினும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களின் ஆசிர்வாதத்துடன், வடக்கில் பல அமைப்புகள் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டன.
இந்த குழுக்கல் தங்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டார். ஆனால் தற்போது யாரோ ஒருவரின் தேவைக்காக சாதாரண கூலிப்படையாக செயற்படும் அளவுக்கு தமிழினம் மாறிப்போயுள்ளமை வேதனைகுரிய விடயமாகும்.
வடக்கில் அதிகளவான இராணுவம் நிலைகொண்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் வடக்கில் எவ்வாறு இம்மாதிரியான ஆயுத குழுக்கள் தோன்றம் பெற முடியும்.
கடந்த அராசங்கத்தில் இராணுவத்தின் தேவைக்காக அப்போதைய பாதுகாப்பு செயலாளரினால் இவ்வாறான ஆயுத குழுக்கள் ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார் என அவர் அந்த செவ்வியில் கூறியுள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்புக்குள் ஒரு வித கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வெளிவரும் நிலையில், அதற்கு அவர் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும். சம்பந்தர் ஐயாவின் காலத்துக்குப் பின்னர் கூட்டமைப்பு உடைந்து பிளவு படும் என தெரிவிக்கப்படுவதாக அந்த செவியில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், இப்படியான கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக பேசப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், காலப் போக்கில் எவ்வாறான மாற்றங்கள் மற்றும் விளைவுகள் ஏற்பட போகின்றது என்பது யாருக்கும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரா.சம்பந்தன் அவர்களுக்கு பின்னர் கூட்டமைப்பின் தலைவர் யார் என்பதையும் தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.