சிந்து நதி மீது இந்தியாவுக்கு முழு உரிமை இருக்கிறது… இந்திய விவசாயிகளுக்கு சிந்துநதி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்; இனி பாகிஸ்தானுக்குள் சிந்து நதி செல்வதை அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
பாகிஸ்தானுக்குள் பாய்ந்தோடும் சிந்து நதி மீது நமக்கு முழு உரிமை உள்ளது. பாகிஸ்தான் வழியாக சிந்து நதி கடலில் கலந்தாலும் அந்த நதி நீர் நமது விவசாயிகளுக்கு சொந்தமானது.
சிந்து நதியை பாகிஸ்தானுக்குள் இனி அனுமதிக்க மாட்டோம். சிந்து நதியில் நமது விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதற்காக நாம் எதையும் செய்வோம். இதுவரை டெல்லியில் அமைந்த அரசுகள் விவசாயிகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை.
இதனால் பாகிஸ்தான் முழுமையாக ஆதாயமடைந்தது. இனி அப்படியெல்லாம் ஆதாயமடைந்துவிட முடியாது இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.