ஃபிடல் காஸ்ட்ரோ 1926ம் ஆண்டில் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே அவர் புரட்சிகர அரசியலில் ஈடுபட்டார்.
1959ல் ஜனவரி 8ம் தேதி, ஃபிடல் காஸ்ட்ரோ தனது ஆதரவாளர்களிடம் பேசும் காட்சி. தோல்வியில் முடிந்த ஆட்சி கவிழ்ப்பை நடத்தியதால், இரண்டு வருடங்களை சிறையில் கழித்த பிறகு, அவர் மெக்ஸிக்கோவில் புகலிடம் தேடிச் சென்றார்.
அவர் 1956 ல் திரும்பிய அவர், செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடங்கினார். காஸ்ட்ரோ இறுதியாக கியூபாவில் ஆட்சியை அந்த நாட்டின் புத்தாண்டு தினமான, 1959 இல் கைப்பற்றினார்.
கியூபாவின் கிரோன் என்ற பகுதியில் உள்ள பே ஆஃப் பிக்ஸ் என்ற இடத்தில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு டாங்கியில் இருந்து குதிக்கும் காட்சி. 1961ல் காஸ்ட்ரோ, புலம் பெயர்ந்து வாழ்ந்த 1,500 கியூப நபர்களுக்கு எதிராக தனது படையை முன்னெடுத்துச் செல்கிறார். புலம் பெயர்ந்தவர்கள் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் ஆதரவு பெற்றவர்கள். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி அவர்களை எதிர்த்து பே ஆஃப் பிக்ஸில் நடத்திய போராட்டத்தில் ஒரு காட்சி.
1962ல் காஸ்ட்ரோவிற்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அமெரிக்க அதிபர் கென்னெடி கியூபாவில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை நீக்குமாறு எச்சரிக்கை செய்தார்.
1963ல் மே மாதம் ஃபிடல் காஸ்ட்ரோ சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவின் கைகளைப் பிடித்து உயர்த்தும் காட்சி. இந்தப் படம் அவர் அதிகாரபூர்வமாக மாஸ்கோவிற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்டது. இறுதியில், சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ ஏவுகணைகளை அகற்றினர். அணு ஆயுதப் போரும் தவிர்க்கப்பட்டது.
பேஸ்பால் விளையாட்டு ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு விருப்பமான விளையாட்டு என்பது நன்கு அறியப்பட்ட தகவல். இது, 1962ல் சியரா மாஸ்ட்ரா என்ற இடத்தில் உள்ள ஆசிரியர்களின் கல்லூரியில் விளையாடும் காட்சி.
பல தாராளவாத கியூப பிரஜைகள் அவரை ஒரு ஒடுக்குமுறை ஆட்சி நடத்திய சர்வாதிகாரி என்று கருதுகின்றனர்.
கியூபா நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பெரும்பாலும், ஆபத்தான தற்காலிகப் படகுகள் மீது ஏறி, தங்கள் தாயகத்தை விட்டு அமெரிக்கவிற்குத் தப்பிச் சென்றனர்.