இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
பௌத்த நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக நேற்று சென்றிருந்த தேரரை, இந்தியாவுக்குள் நுழைய குடிவரவு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
அதற்கமைய அவர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். விசா பிரச்சினையே அதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இலங்கை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வழங்கப்பட்டிருந்த இரட்டை நுழைவு விசா காலம் நிறைவடைந்திருந்தமையே இந்த சிக்கல் ஏற்பட காரணமாகியுள்ளது.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஞானசார தேரர் அதன் பின்னர் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டு மீண்டும் இந்தியா சென்றிருந்தார்.
அதற்கமைய அவருக்கு இந்தியாவிற்குள் நுழைவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரட்டை நுழைவு விசா நிறைவடைந்துள்ளது. எனினும் அவர் அதனை அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன் தினமே ஞானசார தேரருக்கு இந்தியா நோக்கி செல்ல நேரிட்டிருந்தது. எனினும் அன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர் பயணிக்கவிருந்த விமானம் புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.