நஸ்ரியாவிற்கு திருமணம் ஆனாலும் எங்கள் கனவு தேவதை நஸ்ரியாதான் என்று போர் பிரகடனம் செய்த இளைஞர்கள் லட்சோப லட்சம் பேர்கள் இன்னும் பூமியில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள்.
எப்படியாவது டைவர்ஸ் ஆகி விடாதா அந்தக் கிளி நம் கைக்கு எட்டாதா என ஏங்கும் இளைஞர்கள் எங்கும் உண்டு.
அப்படி ஒரு இளைஞர் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உயிரோடு உலாவுகிறார்.
வாழ்கையில் ஒரே ஒரு முறை நஸ்ரியாவை பார்த்து விட்டால் அடுத்த கணமே சுனாமி வந்து மூழ்கி செத்தாலும் சந்தோஷமே என்று நண்பர்களிடம் இதயம் இனிக்க, கண்கள் பனிக்க உருகுவாராம்.
இவர் பெயர் ஸ்ரீநிவாஸ். நஸ்ரியா திருவனந்தபுரம் வந்திருக்கிறார். ஒரு மாலை நேரம் ஷாப்பிங் போய் இருக்கிறார்.
அந்த ஷாப்பிங் மாலில் தான் ஸ்ரீனிவாஸ் ஒரு கடையில் வேலை பார்கிறார். தேவதை நஸ்ரியா அந்தக் கடைக்கே போய் பொருட்கள் வாங்கி இருக்கிறார்.
மேக்கப் இல்லாத நஸ்ரியாவை பார்த்ததும் இந்த பொண்ணை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று குழம்பியவர்..மேடம் நீங்க……என்று இழுத்திருக்கிறார்.
நஸ்ரியா சிரித்த படி “நான் நஸ்ரியா” என்று கூற அதிர்ந்த ஸ்ரீநிவாஸ் வீல்… என்று அலறியபடி நெஞ்சைப் படித்தபடி மயங்கி சரிந்திருக்கிறார்.
கடைப் பையன்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி இருக்கிறார்கள். நஸ்ரியாவிற்கு குழப்பம்..
மயக்கம் தெளிந்து எழுந்த ஸ்ரீநிவாஸ் கண்கள் கலங்கி நான் பார்க்கணும்னு தவம் கிடந்த நஸ்ரியா நீங்கதானா..படத்துல அம்புட்டு அழகா இருப்பீங்களே என்று கேட்க,
அது சினிமா சேட்டன் மேக்கப் போடுவோம்ல..என்று கூலாகச் சொல்லி, காசு கொடுத்து விட்டு காரில் ஏறிச் சென்று விட்டாராம்.
பாவம் ஸ்ரீநிவாஸ்… இன்னும் அவரால் சுய நினைவிற்கு திரும்ப முடிய வில்லையாம்.