வாதுவை பொத்துபிட்டிய பிரதேசத்தின் புகையிரத கடவையை கடக்க முயன்ற கார் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் காரில் பயணித்த ஐவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
களுத்துறையிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடனேயே கார் மோதி விபத்து பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை வாத்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொல்லிகொட பகுதியில் வைத்து ரயில் கடவையை கடந்துச் செல்ல முற்பட்ட கார் அதிவேக ரயிலில் மோதியதில் கார் தூக்கி எறியப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காரில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஐவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
60 வயதுடைய கருணாமுனி கொல்வின் டி சில்வா,49 வயதுடைய கருணாமுனி பியல் டி சில்வா, 53 வயதுடைய கருணாமுனி சந்திர பிரேமலால் டி சில்வா, 45 கருணாமுனி சீ. சந்திர சில்வா , 43 வயதுடைய துமிந்த யாப்பா உள்ளிட்டோரே இவ்விட்பத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது.
நேற்று மதியம் 3 மணியளவில் இவ்விபத்து சம்பவித்த பகுதியில் ரயில் கடவை உள்ளதாக இல்லையா என்பது தூரத்திலிருந்து பார்க்கும்போது தெளிவாக தெரியாதென்றும் என்றும் இது ஒரு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ரயில் கடவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.