இந்திய மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா டபிஸ்யூ டபிஸ்யூ ஈ (WWE) மூலம் தி கிரேட் காலி என உலகமெங்கும் புகழ் பெற்றவர். 2007-ம் ஆண்டு நடைபெற்ற WWE உலக ஹெவி வெயிட் போட்டியில் வெற்றி பெற்றார்.
இவர் பஞ்சாப் மாகாண காவல்துறையில் பணியாற்றியவர். இப்போது பஞ்சாப்பில் மல்யுத்த பள்ளி ஒன்றினை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பண மதிப்பிழக்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீரர் கிரேட் காலி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடியின் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரேட் காலி, “ மத்திய அரசின் இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு பயன் அளிக்கக் கூடிய ஒன்று. நாட்டிற்கு நற்பலன் தரக்கூடியதே.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ள விரும்பினேன்.
நடைமுறையில் மக்கள் சில சிக்கல்களை அனுபவித்து வந்தாலும் நாட்டிற்கு இது நன்மை அளிக்கக் கூடியது என்று” தெரிவித்தார்.