மிகவிரைவில் வீழ்ச்சிக்காணவுள்ள இலங்கையை காப்பாற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு செவனகல பகுதியில் இடம்பெற்றபோது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இந்த நாட்டை மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்வது மாத்திரமல்லாமல், நாட்டை இருளில் இருந்து காப்பாற்ற அவரால் மாத்திரமே முடியும் என்றும் பசில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.