குறிப்பாக, சென்னையின் மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ள, போயஸ் கார்டன், வேதா இல்லம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுகிறது. இந்த இல்லம், 24 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்டது. கட்டிட பரப்பளவு 21662 சதுர அடியாகும்.
போயஸ் கார்டன் இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லம், அவரது தோழி சசிகலாவுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 2 வருடங்களுக்கு முன்பே, சசிகலாவுக்குத்தான் அந்த சொத்து என ஜெயலலிதா உயில் எழுதி வைத்ததாக ஒரு தகவல் பரவுகிறது. அல்லது பரப்பப்படுகிறது.
வேதா இல்லம் போயஸ் கார்டன் சொத்து 1967ம் ஆண்டு, ஜெயலலிதாவால் அவரது அம்மா சந்தியாவுடன் சேர்ந்து ரூ.1.32 லட்சத்துக்கு வாங்கப்பட்டது. வேதவள்ளி என்ற ஜெயலலிதா தாயின் இயற்பெயரை மனதில் வைத்து, அந்த வீட்டுக்கு வேதா இல்லம் என பெயர் சூட்டியிருந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து மதிப்புபடி, அவரது சொத்து மதிப்பு ரூ.113.73 கோடியாகும். இதில் அசையும் சொத்துக்கள் ரூ.41.63 கோடியாகும். அசையா சொத்துக்கள் ரூ.72.09 கோடியாகும். கையிலுள்ள ரொக்கம் ரூ.41000 மற்றும் கடன் ரூ.2.04 கோடியாகும்.
அசையும் சொத்துக்கள் ஜெயலலிதா தனது பிரமாண பத்திரத்தில் கூறியிருந்தபடி, அவரிடம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அம்பாசிட்டர், மகேந்திரா ஜீப், மஸ்டா மேக்சி, ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மகேந்திர பொலேரோ, டெம்போ டிராவலர், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கான்டசா, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள டெம்போ டிராக்ஸ், தலா ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரு, டொயோடா பிரடோஸ் ஆகியவை அவரின் வாகனங்களாக இருந்தன.
பார்ட்னருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள உயில்படி, கோடநாடு எஸ்டேட் மற்றும் சசி என்டர்பிரைசஸ் ஆகியவை அந்த சொத்தின் வாழும் பார்ட்னருக்கு செல்ல உள்ளது. போலவே, ஜெயா பப்ஷிகேஷன்ஸ் நிறுவனமும், பார்ட்னருக்கு போகிறது. ஜெயலலிதா தவிர்த்த இன்னொருவர் இந்த சொத்துக்களின் பார்ட்னர். ஒருவர் இறந்துவிட்டால் மற்றொருவருக்கு முழு உரிமையும் செல்வதுதான் அதன் சாராம்சம். அந்த நபர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன என்பது தெரியுமா?
2016 சட்டமன்ற தேர்தலின் போது ஆர்.கே நகரில் போட்டியிட ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் அவர் தெரிவித்திருந்த சொத்து விவரங்கள் இவைதான்.
ஜெயலலிதா மொத்த சொத்து மதிப்பு ரூ. 118 கோடியே 58 லட்சம்
அசையும் சொத்துகள்
அசையும் சொத்து என்ற வகையில் நகை, வாகனங்கள் போன்றவற்றின் மதிப்பு 41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 ரூபாய்.
நிலம், கட்டடம் போன்ற அசையா சொத்தின் மதிப்பு ரூ. 72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 ரூபாய். அசையா சொத்தில் போயஸ் கார்டன், மந்தவெளி, தேனாம்பேட்டை, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள வணிக கட்டடங்களும் அடங்கும். இதைத்தவிர, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஹைதராபாத்திலும் 17.93 ஏக்கர் இருக்கிறது.
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரூ. 10 கோடியே 63 லட்ச ரூபாய். இதில் இரண்டு கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் முதலீடாக ரூ. 27 கோடியே 44 லட்ச ரூபாய் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பில் முடக்கப்பட்ட தங்கம் 21280.30 கிராம். வெள்ளி பொருட்கள் 1250 கிலோ.
தனக்கு கடனாக 2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987 ரூபாய் உள்ளது என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஜெயலலிதா சொன்ன தகவலின்படி அவருக்கு சொந்தமாக ஒன்பது கார் உள்ளன. இதில் ஒரு அம்பாசிட்டர் கார் முப்பது வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கிறார்.
ஜெயலலிதா உயில் எதாவது எழுதி வைத்திருந்தாரா என்பது இதுவரை தெரியவில்லை. இதுபற்றி அவரது தொண்டர்கள் சிலரிடம் பேசியபோது, போயஸ் கார்டன் இல்லத்தை அவரது நினைவிடமாக்க போவதாக தெரிவித்தார்.
சிறுதாவூர் தோட்டத்தில் ஒரு மணி மண்டபமும் கட்ட அதிமுக உயர்மட்ட குழுவினர் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
உயில் எதுவும் இல்லாதபட்சத்தில் ஜெயலலிதாவின் 100கோடிக்கும் அதிகமான சொத்து கட்சிக்கு செல்லலாம்.
– சக்திவேல் முருகன்