தமிழகத்தில் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
சோனியாஎன்ற 23 வயது பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு, மாலை 6.30 மணிக்கு வீடு திரும்புவதற்காக பஸ்சில் தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. பஸ்சில் இருந்து அவர் இறங்கியபோது மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அவரை அழைத்துள்ளார்.
சோனியா அவருடன் செல்ல மறுத்ததால் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதும் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனியாவின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதுபற்றி பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சோனியா கழுத்தில் ரத்தம் வழிய மயங்கி விழுந்துள்ளார். அந்த இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சோனியாவை சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சோனியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சோனியாவை கொலை செய்த வாலிபர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றார்.
பின்னர் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். அந்த வாலிபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சோனியா வசித்து வந்த அதே தெருவில் வசித்து வந்த பிரசாத் என்பவரே குறித்த இளைஞன் எனவும் இருவரும் காதலித்து வந்தமையும் தெரியவந்துள்ளது.
இடையில் இவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக சோனியா பிரசாந்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
பலமுறை பிரசாந்த் சோனியாவை பின்தொடர்ந்து வந்து தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் சோனியா பிரசாந்துடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
6 ஆண்டுகளாக சோனியாவை தான் காதலித்து வந்ததாகவும், ஆனால் தன்னை தவிர்த்துவிட்டு வேறு ஒரு வாலிபருடன் சோனியா பேசி வந்தார்.
இதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது, என்னை அவமானப்படுத்தியதால் ஆத்திரத்தில் சோனியாவை கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று பிரசாந்த் போலீசில் தெரிவித்தார்.
பிரசாந்த் தன்னுடைய முகநூலில் பிரசாந்த் சோனியா என்ற பெயரை சுருக்கி ‘பிரா சோனு’ என பதிவு செய்துள்ளார்.
சோனியாவை உயிருக்குயிராக காதலித்ததாகவும், தன் காதலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸார் தொடர்ந்தும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.