ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக சசிகலா தான் அடுத்த பொதுச் செயலாளர் என பேசப்படுகிறது, மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து தலைமையை ஏற்றுக் கொள்ளும் படி வற்புறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவரை பற்றி சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தால் பொலிசில் புகார் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தொழில்நுட்பபிரிவின் கூறுகையில், அதிமுக பற்றியோ, சசிகலாவை பற்றியோ சமூகவலைத்தளங்களில் யாராவது வதந்தி பரப்பினால் மற்றும் கிண்டல் மீம்ஸ்கள் பதிவேற்றினால் அவர்கள் மீது பொலிசார் மூலம் கடும் நடவடிகை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.
மேலும், முக்கியமாக சசிகலா பற்றி எதிர்மறையான கருத்துகள் திட்டமிட்டு பரவ விடப்படுகிறது. இதில் 60 சதவீதம் எதிர்க்கட்சிகளின் செயல் எனவும், இதை அவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்