சிறிலங்காவில் 2016 ஆம் ஆண்டு அதிகபட்ச விபத்துக்கள், யாழ்ப்பாணம்- கண்டி இடையிலான ஏ-9 நெடுஞ்சாலையிலேயே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏ-9 நெடுஞ்சாலையில் இந்த ஆண்டு இடம்பெற்ற விபத்துக்களில் மாத்திரம், 117 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்துக் காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் சாவகச்சேரியில் 11 பேர் கொல்லப்பட்ட விபத்தும் இதில் உள்ளடங்கியுள்ளது.
ஏ-9 நெடுஞ்சாலையில் அதிகளவிலான விபத்துக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன என்றும் இந்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், மதுபோதையில் வாகனம் செலுத்தியதாலுமே அதிகளவு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.