சென்னை: நடிகை மனிஷா யாதவுக்கும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாம்.
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படம் மூலம் நடிகையானவர் மனிஷா யாதவ். பெங்களூரை சேர்ந்த மனிஷா மாடலிங்கும் செய்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா நடித்திருந்தார்.
சொப்பன சுந்தரி
சென்னை 28-2 படத்தில் சொப்பன சுந்தரி உன்னை யாரு வச்சிருக்கா என்ற பாடலுக்கு மனிஷா யாதவ் ஜெய், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா உள்ளிட்டோருடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டிருந்தார்.
மனிஷா
சென்னை 28-2 படத்திற்கு பிறகு மனிஷாவை ரசிகர்கள் சொப்பன சுந்தரி என்றே அழைக்கிறார்கள். மனிஷா புதிய படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறாராம்.