ஜெர்மனி பெர்லின் நகரில் திங்களன்று கிறிஸ்துமஸ் சந்தையில் லாரியை புகுத்தி 12 பேரைக்கொன்ற சந்தேக நபர் அனிஸ் அம்ரி இத்தாலியின் மிலன் நகரில் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளதுறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அந்த லாரியில் இருந்த கைரேகையும் சுட்டுக்கொல்லப்பட்டவரின் கைரேகையும் ஒத்துப்போவதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் மார்கோ மின்னிட்டி தெரிவித்துள்ளார்.
இன்று (23-12-2016) வெள்ளிக்கிழமை விடியற்காலை மூன்றுமணிக்கு மிலன் நகர காவல்துறையினருக்கும் அம்ரிக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
Pictures emerged this morning of the terrorist lying dead in the street having been shot by Italian police
ஒன்பது மாதமாக பணியில் இருக்கும் பயிற்சி காவல்துறை அதிகாரி ஒருவர் பதிலுக்கு அம்ரியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காவல்துறை அதிகாரிக்கும் காயம் பட்டிருந்தாலும் அவரது காயங்கள் ஆபத்தானவை அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பெர்லினில் நடந்த லாரி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.
ஜேர்மனி தாக்குதல் சந்தேக நபரை தேடி பாரிய தேடுதல் நடவடிக்கை
22-12-2016
ஜேர்மனியில் லொறி தாக்குதலை மேற்கொண்ட துனீசிய பிரஜையை இலக்குவைத்து ஐரோப்பாவில் பாரிய தேடுதல் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.அனிஸ் அமீர் என்ற 24 வயது நபரை கைதுசெய்வதற்காக தீவிர தேடுதலை ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேர்லினில் 12 பேர்கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்த லொறிக்குள் அமீரின் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தே அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அவர் ஆபத்தான நபர் என அறிவித்துள்ள ஜேர்மன் அதிகாரிகள் அவரை கைதுசெய்ய உதவுபவர்களிற்கு சன்மானத்தை அறிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் ஜேர்மனிக்குள் நுழைவதற்கு முன்னர் நான்கு வருடங்கள் இத்தாலியில் சிறைத்தண்டனையை அனுபவித்தவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்தவருடம் ஜேர்மனிக்குள் இந்த நபர் நுழைந்தவேளை வேறு குற்றச்செயல்களிற்காக இவர் கண்காணிக்கப்பட்டார், எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.