இச்சம்பவம் பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பாடசாலையில் 17 மற்றும் 18 வயதுடைய மாணவ, மாணவிகள் பயின்று வந்துள்ளனர்.
பொதுவாக, பாடசாலை படிப்பு முடியும் திகதியில் அதனை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
இதனை தொடர்ந்து ஆசிரியை ஒருவருடன் இணைந்து மாணவிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.
எனினும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளை மட்டும் மறைக்கும் வகையில் கறுப்பு அட்டைகளை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் ‘இதுபோன்ற அறுவருக்கத்தக்க செயல்கள் பிரான்ஸில் மட்டுமே நிகழும்’ என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது பாடசாலை மாணவ, மாணவர்களின் தனிச் சுதந்திரத்தை காட்டுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.