வனியாவில் இன்று அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் உருவப்படத்தை எரித்து, தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
போரின் போதும் அதற்குப்வ பின்னரும் கைதுசெய்யப்பட்டும் இராணுவுத்தினரிடம் சரணைந்தும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக் கண்டறியும் சங்கத்தால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தின் இறுதியில் இரா.சம்பந்தனின் உருவப்படம் எரிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தின் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கத்தினர் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரை அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தின் இறுதியில் குறித்த இடத்திலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக வைத்து எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப்படம் எரிக்கப்பட்டதோடு, எரியூட்டபட்ட உருவப்படத்தை சூழ பெண்கள் கூட்டமாக நின்று எதிர்கட்சி தலைவருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.
காணாமல் போகச் செய்யப்படட தமது உறவுகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடின் தமது போராட்டம் நீடிக்கும் எனவும் எச்சரித்துள்ள காணாமல் போனோரின் உறவிகளர் இதுவே இரா.சம்பந்தனுக்கு கொடுக்கும் கடைசி எச்சரிக்கை எனவும் குறிப்பிட்டனர்.
தங்கள் பிள்ளைகளின் தியாகங்கள் மீது சவாரி செய்து, அரச பதவியும் பணமும் பெற்று மயங்கி மதி கெட்டு ஒற்றையாட்சியோடு பிளவுபடாத இலங்கையை உருவாக்க துடிக்கும் துட்டகைமுனுவின் பேரனுக்கு எல்லாள மகாராசாக்களை ஈன்றெடுத்த ஈழத்து தாய்மார்களின் இறுதி அஞ்சலிகள் என எரிக்கப்பட்ட இரா.சம்பந்தனின் உருவப் படத்திற்கு கீழ் எழுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.