இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 4 வது ஒருநாள் போட்டி, கொழும்பு, ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
முதலில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது,ஆரம்ப வீரர் தவான் வேகமாக ஆட்டமிழந்தாலும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கோஹ்லி, ரோஹித் சர்மா ஜோடி இலங்கை பந்துவீச்சாளர்களை திணறடித்து.
இருவரும் 219 ஓட்டங்கள் பகிர்ந்ததோடு சிறப்பாக துடுப்பாடி சதமடித்தனர், கோஹ்லி இன்று தனது 29 வது சதத்தையும், ரோஹித் சர்மா 13 வது சதத்தையும் பெற்றனர்.
30 வது ஓவரை மலிங்க விசியபோது அந்த ஓவரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கோஹ்லி 131 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.மலிங்க இன்று தனது 203 வது போட்டியில் 300 வது ஒருநாள் விக்கெட்டை கைப்பற்றினார்.
ஆயினும் இந்திய அணியின் ஓட்டவேகத்தை இன்றைய போட்டியில் தலைவராக விளையாடும் மலிங்க சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்தினர், லோகேஷ் ராகுல், பாண்டியா ஆகியோர் விரைவாக நடையை கட்டினாலும், இன்று தனது 300 வது ஒருநாள் போட்டியில் விளையாடும் டோனி, இளம் வீரர் மனிஷ் பாண்டேயுடன் இணைந்து ஓட்டவேகத்தை உயர்த்தினார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது. டோனி, மனிஷ் பாண்டே ஜோடி 5 வது விக்கெட்டில் பெறுமதியான 101 ஓட்டங்கள் பகிர்ந்ததனர்.
மனிஷ் பாண்டே ஆட்டம் இழக்காது 50 ஓட்டங்களையும், டோனி ஆட்டம் இழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். இன்றைய போட்டி டோனியின் 73 வது ஆட்டம் இழக்காத இன்னிங்ஸ்சாக அமைய பெற்றது. சமிந்த வாஸ், சோன் பொல்லாக் ஆகியோரோடு இணைந்து டோனி புதிய உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
இலங்கை அணிக்கு 376 எனும் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை இலங்கை அணி பெறுவார்கள் என்று நினைத்திருந்த இலங்கை அணி இரசிகர்களுக்கு இந்த நிச்சயித்த ஓட்ட எண்ணிக்கையைப் பார்த்த போதே நிச்சயம் இலங்கை அணி தோல்வியியை நோக்கியே முன்னகரும் என்று நினைத்தது போலவே இலங்கை அணியும் நடந்து கொண்டது.
42.4 ஓவர்களில் 207 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
மத்யூஸ் மாத்திரம் 70 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் பும்ரா ஹார்டிக் பாண்டியா மற்று, குல்தீப் யாதவ் தலா இரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.