மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு நேர கடுகதி ரயிலில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது வரை அடையாளம் காணப்படாத உயிரிழந்த குறித்த நபர் திராய்மடு சுவிஸ் கிராமத்தில் வைத்து ரயிலில் மோதுண்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது உடல் ரயில்வே அதிகாரிகளால் மீட்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியதை அடுத்து ஏறாவூர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவரின் விவரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.