Tajikistan நாட்டின் ஜனாதிபதி உத்தரவையடுத்து ஏழை நபரை இளம் பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Tajikistan நாட்டில் சர்வாதிகாரி Emomali Rahmon தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.
இங்கு வசிக்கும் Saidsho Asrorov (23) என்பவர் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் Emomali-யிடம் சென்று அவர் குறித்து புகழ்ந்து கவிதை கூறியுள்ளார்.
இதில் மகிழ்ச்சியடைந்த ஜனாதிபதி Emomali, Saidsho-க்கு திருமணம் ஆகிவிட்டதா என விசாரித்துள்ளார்.
தனக்கு திருமணமாகவில்லை என அவர் கூற, திருமண மையத்தில் இது குறித்து பேசி Saidsho-க்கு பெண் தேடும்படி Emomali உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து Marjona Hudoidodova (22) என்ற பெண்ணுடன் Saidsho-வுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
மணமகள் ஏழையாக இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியின் பேச்சை மீறாமல் Marjona அவரை திருமணம் செய்து கொண்டார்.
Tajikistan நாட்டின் வழக்கப்படி திருமண நிகழ்வின் போது மணமகள், மாப்பிள்ளை முகத்தை பார்க்க கூடாது.
மேலும், முகத்தை சோகமாக வைத்திருக்க வேண்டும். அப்படி மாப்பிள்ளை முகத்தை பார்த்தால் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் உள்ளதாக அர்த்தமாகி விடும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் திருமணத்தின் போது சோகமாக இருந்தார் Marjona.
திருமணத்துக்கு ஆனா £1,400 செலவை அரசே ஏற்று கொண்டுள்ளது.
Dictatorship: President Rahmon has ruled Tajikistan with an iron fist since 1992
Preparations: Ms Hudoidodova, seen making her own wedding dress, said she and her parents had been pleased to find a suitor who would allow her to continue to work as a nurse