அண்டர்டேக்கர், டிரிபிள் ஹச், ஜான் சீனா என்றெல்லாம் இந்திய ரசிகர்கள் மனதைக் கவர்ந்த பல மல்யுத்த வீரர்கள் பங்கேற்கும் wwe எனப்படும் உலக குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் தி கிரேட் காளி.
கடந்த ஆண்டு நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற கவிதா கடந்த ஜூன் மாதம் wwe-ல் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
கிரேட் காளி தலைமையில் பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற கவிதா, சமீபத்தில் நியூசிலாந்து வீராங்கனை டகோடா கையுடன் மோதினார். அதில் தோல்வியடைந்தார்.
Mae Young Classic என்ற தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை தோல்வியைத் தழுவினாலும், பல்வேறு ரசிகர்களும் இந்த போட்டியை ஆவலுடன் கண்டு வருகின்றனர்.
Mae Young Classic இதுவரை நடத்திய போட்டிகளில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட போட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுவரை இந்தப் போட்டி இணையத்தில் 30 லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது.