சுல்தான், இந்த காளையின் விந்து மட்டும் ரூ.1 கோடி! உலகே வியக்கும் அசாத்தியா காளை!
இதன் மூலம் பசுக்கள் மற்றும் கன்றுக் குட்டிகள், பசுவின் மூலம் கிடைக்கும் பால் என அனைத்தும் ஆரோக்கியமாக இருந்து வருகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தனக்கென ஒரு தனி அடையாளம் கொண்டு வாழ்ந்து வருகிறது ஒரு காளை மாடு. அது தான் சுல்தான். ஒரு சூப்பர் ஹீரோவிற்கு தரும் அளவிற்கு ஒரு இன்ட்ரோ தர வேண்டி இருக்கிறது சுல்தானிற்கு. அந்தளவு மதிப்பும், சிறப்பும் கொண்டவன் சுல்தான்…
சுல்தான், இந்த காளையின் பெயர்! இந்தியாவின் மிகவும் மதிப்புடைய காளையாக திகழ்ந்து வருகிறான் இந்த சுல்தான். உலகிலேயே தனித்தன்மை வாய்ந்த காளையாக வாழ்ந்து வருகிறது இந்த சுல்தான் காளை. மிக சிறிய வயதிலேயே சுல்தான் மிக உயரமாகவும், பெரிதாகவும் வளர்ந்துவிட்டான் என்கிறார் சுல்தானை வளர்த்து வரும் நபர்.
சுல்தானின் உடல் எடை ஒன்றரை டன், அதாவது 1500 கிலோ. ஏறத்தாழ சுல்தானின் உயரம் ஆறு அடி (5”11). சுல்தானின் நீளம் மட்டும் 14 அடி ஆகும். இதெல்லாம் தான் சுல்தானை கம்பீரமாக நடைப்போட வைக்கிறது. இதற்கே வியந்தால் எப்படி , இன்னும் நிறைய இருக்கிறது சுல்தான் பற்றி அறிந்துக் கொள்ள.
சில்தானின் தற்போதைய மதிப்பு 210 மில்லியன் (21 கோடி). சுல்தான் இதுவரை கலந்து கொண்டதில் 6,7 போட்டிகளில் முதல் பரிசு வென்று அசத்தியுள்ளான்.
சுல்தான் முர்ரா இனத்தை சேர்ந்த காளை வகை. மற்றும் மிகவும் ஆரோக்கியமானவை. சுல்தான் மட்டுமல்ல, சுல்தானின் பிள்ளைகளும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். தினமுன் சுல்தானை ஐந்து கிலோ மீட்டர் நடத்தி அழைத்து செல்கிறார்கள். தினமும் இரண்டு முறை குளிக்க வைக்கிறார்கள். சுல்தானின் சருமம் மிகவும் ஷைனிங்காக இருக்கிறது.
கம்பீரம்மாக உலா வந்துக் கொண்டிருக்கும் இந்த சுல்தானின் வயது எட்டு தான். உலகை வியக்க வைக்கும் சுல்தான் விஸ்கி குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறான். தினமும் மாலை சுல்தானுக்கு விஸ்கி தருகிறார்கள். அதை சுல்தான் விரும்பி குடிக்கிறான். இந்தியாவிலேயே சுல்தான் ஒரு தனி வகையில் சிறந்து விளங்குகிறான்.