“80 வயதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதுகலைமானி பட்டம் பெற்று தென்மராட்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த திருமதி யோகரட்ணம் செல்லையா.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு விழா கடந்த வார இறுதியில் யோர்க்வூட் நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த ஆசிரியை திருமதி யோகரட்ணம் செல்லையா அவர்கள் M A ( தமிழ்) முதுகலைமானி படத்தைப் பெற்றுள்ளார். இவர் காலம் சென்ற முத்தமிழ் வித்தகர் திரு அ .பொ . செய்யாவின் மனைவி குறிப்பிடதக்கது.